கூட்டுறவு வங்கிகளுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி – அதிரடி அறிவிப்பு!
வங்கி விதிமுறை சட்டங்களை அனைத்து வங்கிகளும் பின்பற்ற வேண்டும். இந்த விதிமுறையை மீறும் வங்கிகள் மீது அபராதம் விதிக்கப்படும். அந்த வகையில் 8 கூட்டுறவு வங்கிகள் இந்த விதிமுறையை மீறியதால் அந்த வங்கிகளின் மீது ரூ.12.75 லட்சம் அபராதம் வரை மத்திய ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. மேலும் இது தொடர்பான தகவல்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
வங்கிகளுக்கு அபராதம்:
இந்தியாவில் அனைத்து வங்கிகளுக்கும் மத்திய ரிசர்வ் வங்கி பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. அத்துடன் அனைத்து வங்கிகளின் செயல்பாடுகளையும் கண்காணித்து வருகிறது. இதனை தொடர்ந்து வங்கி விதிமுறைகளை பின்பற்றாத வங்கிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அபராதம் விதிக்கவும் மத்திய ரிசர்வ் வங்கியால் மட்டுமே ஆணை பிறப்பிக்க முடியும். அதன்படி இந்தியாவில் வங்கி விதிமுறைகளை மீறிய 8 கூட்டுறவு வங்கிகளின் மீது மத்திய ரிசர்வ் வங்கி ரூ.12.75 லட்சம் அபாரம் விதித்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ்வில் பொதுமுடக்கம் அமல் – அதிர்ச்சியில் பொதுமக்கள்!
தற்போது இந்த 8 கூட்டுறவு வங்கிகளை பற்றி விரிவாக பார்க்கலாம். முதலாவதாக வங்கி விதிமுறையை மீறிய பள்ளி கூட்டுறவு வங்கிக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக பகத் அர்பன் கூட்டுறவு வங்கிக்கு ரூ.3 லட்சமும், மணிப்பூர் பெண்கள் கூட்டுறவு வங்கிக்கு ரூ.2 லட்சமும் அபராதம் ரிஷ்வர் வங்கி விதித்துள்ளது. மேலும் யுனைட்டட் இந்தியா கூட்டுறவு வங்கிக்கு ரூ.1 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜிலா சஹாகரி கேந்திரிய வங்கிக்கு ரூ.1 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் விதியை மீறி டெபாசிட் பணத்தை உயர்த்தியதால் அமராவதி மெர்ச்சண்ட் கூட்டுறவு வங்கிக்கு 50,000 ரூபாயும், இதே போல் பியாஸ் மெர்கன்டைல் கூட்டுறவு வங்கிக்கு 25,000 ரூபாயும், நவநிர்மான் கூட்டுறவு வங்கிக்கு 1 லட்ச ரூபாயும் உள்ளிட்ட வங்கிகளுக்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த பரமுல்லா மத்திய கூட்டுறவு வங்கிக்கு ரூ.2 லட்சம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரிசர்வ் வங்கியின் விதிமுறையை மீறியதாக காஞ்சிபுரம் கோ-ஆப்பரேட்டிவ் டவுன் பேங்க் லிமிடெட் வங்கிக்கு ரூ.2 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.