தமிழகத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு – டிச.4ம் தேதி முகாம்! கலெக்டர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு - டிச.4ம் தேதி முகாம்! கலெக்டர் அறிவிப்பு!
தமிழகத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு - டிச.4ம் தேதி முகாம்! கலெக்டர் அறிவிப்பு!
தமிழகத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு – டிச.4ம் தேதி முகாம்! கலெக்டர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தனியார் துறை வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. ஏனென்றால் கொரோனா காலகட்டத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை இழந்துள்ளது. அதனால் தனியார் நிறுவனங்களில் காலிப்பணியிடங்கள் அதிக அளவில் இருந்து வருகின்றன. அத்தகைய காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக பெரும்பாலான மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஊக்கத்தொகை வழங்க திட்டம்!

இந்த வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்வதில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அந்த வகையில் தற்போது திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த வேலைவாய்ப்பு முகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் என்றும், முகாமில் 25க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிச.10 வரை இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – மாநில அரசு உத்தரவு!

இந்த முகாமில் வேலைவாய்ப்பு இல்லாத 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ படித்த அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில் பங்கேற்பவர்கள் தங்களது 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், கல்வி சான்றிதழ் நகலுடன் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in  என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். வரும் டிச.ம் தேடி நேர்காணல் நடைபெறும். குறித்த மேலும் விபரங்கள் அறிய 04175-233381 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!