தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஊக்கத்தொகை வழங்க திட்டம்!
தமிழக ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்க தேவையான விவரங்களை அதிகாரிகளிடம் இருந்து பெற்று வருகிறது. இதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கதொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊக்கத்தொகை:
தமிழக அரசு மக்களுக்கு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும் கூட்டுறவுத்துறையின் ரேஷன் கடை மூலம் வழங்குகிறது. ரேஷன் கடை பணியாளர்கள் அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்று சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில் மொத்தம் 34,773 ரேஷன் கடைகள் உள்ளது. அரசின் பொது விநியோக முறையின் கீழ் ரேஷன் கடைகள் செயல்படுகிறது. கூட்டுறவு துறை வழியாக அனைத்து ஊர்களிலும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து ரேஷன் கடைகளிலும் ஒரு விற்பனையாளர் மற்றும் கட்டுனர் என்று இரண்டு பேர் பணியில் நியமிக்கப்படுவார்கள்.
டிச.10 வரை இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – மாநில அரசு உத்தரவு!
ரேஷன் கடை ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை அவ்வப்போது அரசிடம் வைத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். சமீபத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் தங்களின் மாதந்திர ஊதியத்தை உயர்த்தி வழங்க கோரி போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக தமிழக அரசு இவர்களின் ஊதியத்தினை உயர்த்தியுள்ளது. கொரோனா காலத்தில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. இதனை ரேஷன் கடை ஊழியர்கள் கூடுதல் பணியாக மேற்கொண்டனர். இதனால் சிறப்பு ஊக்கத்தொகையாக கார்டு ஒன்றுக்கு தலா 50 காசு வழங்குவதாக அரசு நிர்ணயித்துள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கு 48 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – 2022ம் ஆண்டிற்கான பட்டியல்!
இதற்காக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.27 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஊக்கத்தொகையினை விரைவில் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்க்கு முகக்கவசம் வழங்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த ரேஷன் கடை ஊழியர்களின் விவரங்களை தமிழக அரசு அதிகாரிகளிடம் சேகரித்து வருகிறது. கூட்டுறவுத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையினால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விரைவில் ஊக்கதொகை வழங்கப்படும். இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.