தமிழகத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – சூப்பர் அறிவிப்பு!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 35க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் சேர்ந்து வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை இன்று ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான முழு விவரங்களும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வு மூலம் நியமிக்கப்படுவார்கள். தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களை அந்தந்த பள்ளி நிர்வாகத்தினர் நேர்காணல் & தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தற்போது தமிழகம் முழுவதும் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதால் பல தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் நடந்தது வருகிறது.
மத்திய அமைச்சகத்தில் ரூ.2,09,000/- ஊதியத்தில் 2021 – தேர்வு & நேர்காணல் கிடையாது
அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியான நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 35க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் நேரடியாக பங்கேற்று ஆசிரியர்களை தேர்வு செய்யும் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடத்தப்படுகிறது. அக்டோபர் 17ம் தேதி ஞாயிற்று கிழமையான இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடத்தப்படுகிறது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், வணிகம், பொருளாதாரம், கணக்கியல், வரலாறு, வணிக கணிதம், இந்தி, அபாகஸ், இசை, யோகா போன்ற பாடங்களுக்கான ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம்.
விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ எலிமினேட் ஆகும் சின்னப்பொண்ணு? அக்சராவுடன் அழுகை! வெளியான ப்ரோமோ!
இந்த பாடங்களில் PET, DTED, B.E. , எம்எஸ்சி. , பிஎஸ்சி. , எம்.ஏ. , பி.ஏ. , எம்.காம். , பி.காம் , எம்சிஏ, பிசிஏ, டி.டி.எட். , எம்.டெக். , பி.டெக், மற்றும் ஆசிரியர் பயிற்சி பட்டம் பெற்றவர்கள் மற்றும் பெறாதவர்களும், அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்களும் கலந்து கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் தகவல்களை 94425 68675, 97888 29179 என்ற தொலைபேசியில் அறிந்து கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவியில் நேரில் சென்று கலந்து கொள்ளலாம்.
முகவரி:
நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கூரப்பாளையம் பிறவு,
பிச்சண்டம்பாளையம் போஸ்ட்,
ஈரோடு – 638 052.