தமிழகத்தில் நாளை(பிப்.16) மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் – கண்டிப்பா கலந்துக்கோங்க!!

0
தமிழகத்தில் நாளை(பிப்.16) மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் - கண்டிப்பா கலந்துக்கோங்க!!

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதம்தோறும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாளை காஞ்சிபுரத்தில் உள்ள திருமலை பாலிடெக்னிக் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

NTPC நிறுவனத்தில் Associate வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 18 வயது முதல் 35 வயது வரையிலுள்ள அனைத்து பட்டப்படிப்பு படித்தவர்களும் கலந்து கொண்டு தங்களுக்கான வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள இருப்பவர்கள் தங்களது கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவற்றை எடுத்து நேரில் வந்து முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய 044-27237124 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!