இந்திய ஐடி நிறுவனங்களில் TCS செய்த சாதனை – மகிழ்ச்சியில் ஊழியர்கள்!
இந்தியாவில் ஐடி சேவை துறையில் முன்னணி நிறுவனங்களுக்குள் கடுமையான போட்டி தற்போது உருவாகியுள்ளது. இந்த நிலையில் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களின் பட்டியலை பிராண்ட் பைனான்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.
ஐடி சேவை நிறுவனங்கள்
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு தொழில் துறையில் அதிகளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனால் தனியார் துறையான ஐடி நிறுவனத்தில் எந்தவொரு பாதிப்பும் இன்றி செயல்பட்டு வருகிறது. ஏனெனில் ஊரடங்கு காலத்திலும் ஐடி பணியாளர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்தனர். ஒவ்வொரு நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் மதிப்பீடு பெரிய அளவில் மாறியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பிராண்ட் பைனான்ஸ் அமைப்பு முன்னணி ஐடி சேவை நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் இரண்டாவது முன்னணி ஐடி நிறுவனமாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இடம் பெற்றுள்ளது. அத்துடன் முதல் இடத்தை பல வருடமாக போராடி வந்த அக்சென்சர் நிறுவனம் இடம்பெற்றுள்ளது. இந்நிறுவனம் 36.2 பில்லியன் டாலர் மதிப்பீடு பெற்றுள்ளது. மேலும் இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனங்களில் அக்சென்சர் நிறுவனம் 4 ஐடி நிறுவனங்களின் மொத்த வருவாயை பெற்றுள்ளது. இந்த பிராண்ட் பைனான்ஸ் நிறுவனம் வெளியிட்ட பட்டியலில் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அனைத்தும் முதல் 25 இடத்திற்குள் வந்துள்ளது.
மத்திய அரசு துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் 2022 – முழு விவரங்கள் இதோ!
மேலும் இந்த பட்டியலில் 3 வது இடத்தை இன்போசிஸ் நிறுவனம் இடம் பெற்றுள்ளது. அத்துடன் முதல் 10 இடங்களில் இந்தியாவில் இருந்து 6 முன்னணி ஐடி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அமெரிக்க ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக தான் உள்ளது. ஆனால் இந்தியாவில் ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம் 2020 ஆண்டு முதல் 2022 ஆண்டு வரை 51 சதவீதமாக இருக்கிறது. அதனால் ஐடி நிறுவனங்கள் கொரோனா காலத்திலும் அதிகமான வளர்ச்சிகளை பெற்று வருகிறது என்று அறியப்படுகிறது.