தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் – ஒரு வாரத்தில் 54.55 லட்சம் பேர் இணைப்பு!
தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 54 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
மின் இணைப்பு எண் – ஆதார்:
தமிழக மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டது. இப்பணியை முடித்தால் மட்டுமே மின் கட்டணம் செலுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மின் நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Follow our Instagram for more Latest Updates
இந்த நேரத்தில் மின் நுகர்வோர்களுக்கு உதவும் வகையில் மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது. இந்த முகமானது டிசம்பர் 31ஆம் தேதி வரை செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க மக்கள் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அறிவுப்பு – ஆட்சியர் உத்தரவு!
Exams Daily Mobile App Download
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 54.55 லட்சம் பேர் ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மின் பயனர்களின் வசதிக்காக ஆன்லைன் வாயிலாகவும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.