பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அறிவுப்பு – ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை (டிச. 6) திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற இருப்பதால், அந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக நடைபெறும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தை கண்டுகளிப்பார்கள். அந்த வகையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் இந்த கோவிலின் சிறப்பாக 10ஆம் நாளான டிசம்பர் 6ஆம் தேதி மலையுச்சியில் தீபம் ஏற்றப்படும். அன்றைய தினம் மக்கள் தங்களின் வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபடுவார்கள். இந்நிலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு வருகிற டிசம்பர் 6ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை விட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை ஆகும்.
தமிழகத்தில் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்து – பொது மக்கள் வரவேற்பு!
Exams Daily Mobile App Download
மேலும் டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் தீபத்திருவிழாவுக்காக 2,692 சிறப்பு பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 ரயில்களுடன் கூடுதலாக 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.