தமிழகத்தில் நாளை (ஜூலை 15) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தின் ராஜபாளையம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட ஆலங்குளம், கோதைநாச்சிபுரம்,கொங்கன்குளம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை ஜூலை 15ம் தேதி (வெள்ளிக்கிழமை) மின் தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மின் பராமரிப்பு பணிகள்
தமிழகத்தில் உள்ள மின் நிலையங்களில் ஏதேனும் விபத்துகள் நடைபெறாமல் இருக்க மாதம் ஒருமுறை மின்தடை செய்யப்பட்டு அதில் ஏற்பட்டிருக்கிற கோளாறுகளை சரி செய்யப்படுதல் மட்டுமின்றி பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக மின்சாரம் இல்லாமல் எந்த வித பணிகளையும் செய்ய முடியாது. இதனால் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் மின்தடை செய்யப்படாமல் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் மின்தடை செய்யப்பட்டு மின்வாரிய பணிகளை செய்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில், தற்போது ராஜபாளையம் மின் கோட்டகத்திற்கு உட்பட்ட பகுதிகளான கோதைநாச்சிபுரம், ஆலங்குளம், கொங்கன்குளம் உள்ளிட்ட மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளான சாரதா நகர், எஸ்.ராமலிங்கபுரம், வரகுணராமபுரம்,ஆப்பனூர், நத்தம் பட்டி, மீனாட்சிபுரம், கம்மாபட்டி, அம்மன் கோவில் பட்டி,தொட்டியபட்டி,கோதைநாச்சிபுரம்,அழகாபுரம், மதுரை சாலை, வ.உ.சி.நகர், சொக்கலிங்கபுரம், அய்யனாபுரம், கலங்காப்பேரி புதூர் மற்றும் கொங்கன்குளம், ராமன் பட்டி, மேல கோடாங்கிபட்டி, நதிக்குடி, பி. திருவேங்கடபுரம், ஆத்தூர், சுப்ரமணியபுரம், மம்சாபுரம், இடையன்குளம், ரெங்கசமுத்திரம், கான்சாபுரம்,
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் முடிவு என்ன? ப்ரோமோ வெளியீடு! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
பூசாரிப்பட்டி, காக்கிவாடன்பட்டி, ஆலங்குளம், ஆலங்குளம் முக்கு ரோடு, முத்துசாமிபுரம், குண்டாயிருப்பு, எதிர்கோட்டை, உப்புப்பட்டி, கல்லமநாயக்கர் பட்டி, ராமுத்தேவன்பட்டி, வளையப்பட்டி, கீழாண்மையாடு, கண்டியாபுரம், எட்டக்கா பட்டி, கே. லட்சுமியாபுரம், கம்மாபட்டி, ரெட்டியபட்டி, ஏ.லட்சுமியாபுரம், சங்கரமூர்த்தி பட்டி, தென்காசி ரோடு, பச்சமடம், காந்தி கலைமன்றம், பி.எஸ்.கே. பார்க், சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை ஜூலை 15ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.