மின்சார மானியத்தை தேர்வு செய்ய புதிய வழிமுறை – டெல்லி அரசு அறிவிப்பு!
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் எளிமையாக மின்சார மானியத்தை தேர்வு செய்வதற்கான புதிய வழிமுறையை துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். மேலும், அதற்கான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மின்சார மானியம்:
டெல்லியில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தலைமையில் மின்சார மானியத்துறையின் மூத்த அதிகாரிகள், மின் விநியோக நிறுவனங்கள் மற்றும் மின் விநியோகத்தின் தொடர்புடைய துறை சார்பில் கடந்த சனிக்கிழமை முக்கிய கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மின்சார மானியத்தை பொதுமக்கள் எளிமையாக தேர்வு செய்ய ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை வெளியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தலைநகரில் இருக்கும் குடியிருப்பாளர்கள் அதிக அளவில் பயனடையலாம்.
தமிழகத்தில் அன்னிய மரக்கன்றுகளை வளர்க்க & விற்க நர்சரிகளுக்கு தடை – ஐகோர்ட் உத்தரவு!
அதாவது, இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் தனது சொந்த விருப்பத்தின் மூலமாக மின்சார மானியத்தை தேர்வு செய்வதற்காகவும், பதிவு செய்யும் செயல்முறையை எளிதாக்க வேண்டும் என்பதற்காகவும் இத்தகைய முடிவு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த திட்டம் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் துணை முதல்வர் அறிவித்துள்ளார்.
தற்போது எப்படி தொலைபேசி இணைப்பு மூலமாகவே மின்சார மானியத்திற்கு பதிவு செய்வது என்பதை பார்க்கலாம். முதலில், கொடுக்கப்பட்ட எண்ணிற்கு அழைப்பு கொடுக்க வேண்டும் அல்லது Whatsapp செய்தியாக அனுப்பலாம். தற்போது அனைத்து பில்களிலும் QR குறியீடு இருக்கும். அதனை நுகர்வோர் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்து கொள்ளலாம். இது மட்டுமல்லாமல் நுகர்வோர் டிஸ்காம் மையத்திற்கும் நேரில் சென்று மானியத்திற்கான விருப்பத்தை பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மானியத்திலிருந்து விலக விரும்பும் நுகர்வோர் அக்டோபர் 1ஆம் தேதி முதல் விலகி கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்