ஓலா மின்சார ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15ல் அறிமுகம் – சிறப்பம்சங்கள் வெளியீடு!
இந்தியாவின் முன்னணி கேப் நிறுவனமான ஓலா, மலிவு விலையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரித்து வருவதாக குறிப்பிட்டிருந்த நிலையில், இந்த ஸ்கூட்டர்களை ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.
ஸ்கூட்டர் அறிமுகம்
அன்றாட வாழ்வில் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக வாகனங்கள் மாறிவிட்டது. தற்பொழுது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களின் விலை உயர்வால் பலரது கவனமும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் திரும்பியுள்ளது. இந்தியாவில் நான்கு சக்கர எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்ற போது, விலை குறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து வருவதாக ஓலா நிறுவனம் கடந்த ஆண்டில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
அஞ்சல் நிலையத்தில் காப்பீடு முகவர் பணி – குவிந்த பட்டதாரிகள் ஏமாற்றம்!
பின்னர் ஜூலை 16 ஆம் தேதி அன்று அதற்கான முன் பதிவுகளையும் அந்நிறுவனம் துவங்கியது. இந்த முன்பதிவு துவங்கிய முதல் நாளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் ஓலா மின்சார ஸ்கூட்டருக்கு முன்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிடப்படும் என ஓலா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சம் என்னவென்றால் 100 -150 கிமீ வரை இதன் வேகம் இருக்கும் எனவும், லித்தியம் அயர்ன் பேட்டரி, கிளவுட் இணைப்பு அல்லாய் வீல்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம் பெற்றிருப்பதாகவும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இவ்வகை வாகனங்கள் எஸ்1 மற்றும் எஸ்1 புரோ என்ற 2 மாடல்களில் முதலாவதாக பயன்பாட்டுக்கு வர உள்ளது. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இதுவரை கிடைத்த வரவேற்பை அடுத்து ஆண்டுதோறும் 20 லட்சம் மின்சார வாகனங்களை தயாரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.