நெருங்கும் தேர்தல் நேரம்…. தேர்தல் கமிஷனின் மாறுபட்ட வழிமுறை – ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை!
நாட்டில் இந்த ஆண்டில் 9 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் லோக்சபா தேர்தலும் நடைபெற உள்ளதால் தேர்தல் கமிஷன் வாக்காளர்களின் பங்களிப்பை அதிகப்படுத்த தற்போது புதிய யுத்தியை கையாண்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை குறித்து விரிவாக பார்ப்போம்.
ஓட்டுப்பதிவு:
நாட்டில் தற்போது தேர்தலில் வாக்காளர்களின் பங்கு மிகவும் குறைவாக உள்ளதால் ஓட்டு சதவீதம் கணிசமாக குறைந்துள்ளது. அதனால் இதனை அதிகப்படுத்த தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் நடப்பாண்டில் மட்டும் 9 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் வருவதுடன் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற உள்ளது. அதன் காரணமாக வாக்காளர்களின் ஓட்டு பதிவு விகிதத்தை அதிகப்படுத்த தேர்தல் கமிஷன் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில், இது தொடர்பான அறிக்கை ஒன்றை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, வாக்காளர்களின் ஓட்டு பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் சுபாஷ் பவுண்டேஷன் உடன் இணைந்து, “நான் ஒரு இந்தியன்; நாங்கள் இந்தியாவின் வாக்காளர்கள்” என்கின்ற பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் காட்சியில் பிரபல சினிமா துறையினர் மற்றும் பல முக்கிய துறையில் இருக்கும் பிரபலங்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய வங்கிகளின் நிலை – மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை!!
இப்பாடல் வாயிலாக கூறப்படுவதாவது, அனைத்து வாக்காளர்களும் தேர்தலில் ஓட்டளித்து தங்களின் ஜனநாயக கடமையை முறையாக செய்யுமாறு வலியுறுத்துகின்றனர். மேலும் இந்த பாடல் சமூக வலைதளங்களில் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு வாரத்திற்குள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.