இந்திய வங்கிகளின் நிலை – மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை!!

0
இந்திய வங்கிகளின் நிலை - மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை!!
இந்திய வங்கிகளின் நிலை - மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை!!
இந்திய வங்கிகளின் நிலை – மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை!!

இந்தியாவில் வங்கிகளின் நிலை சீராக உள்ளது என்று மத்திய ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அதானி குழுமத்திற்கு இந்திய வங்கிகள் வழங்கிய கடன் தொகை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி:

அதானி குழுமத்தின் பங்கு வர்த்தகத்திற்கு நியூயார்க் பங்கு சந்தை குறியீட்டெண்ணான டோ ஜோன்ஸ் தடை விதித்துள்ளது. இதனையடுத்து அதானி குழுமத்திற்கு அடுத்தடுத்து சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. அண்மையில் அதானி குழுமம் சுமார் 20,000 கோடி இரண்டாம் நிலை பங்குகளை வெளியீடும் நடவடிக்கையை மேற்கொண்டது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இதனை வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் தொகையை அதானி நிறுவனத்திடம் வழங்கியிருந்த நிலையில் திடீரென பங்கு வெளியிட்டு நடவடிக்கையை திரும்ப பெறுவதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது. மேலும் முதலீட்டாளர்கள் செலுத்திய தொகையை திரும்ப பெறுவதாகவும் அதானி குழுமம் தெரிவித்தது. இந்த நிலையில் மத்திய ரிசர்வ் வங்கி அதானி குழுமத்திற்கு வங்கிகள் வழங்கிய கடன்கள் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

சென்னை மருந்து நிறுவனத்தில் ரெய்டு – அதிகாரிகள் சோதனை! அமெரிக்கா குற்றச்சாட்டு விவகாரம்!!

அதன்படி தற்போது இந்திய வங்கிகள் சுமார் ரூ. 80,000 கோடியை அதானி குடும்பத்திற்கு கடனாக வழங்கி உள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது மொத்த கடன் தொகையில் 38% என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் நாட்டின் முதலீட்டு வளம் சொத்துக்களின் தரம் மற்றும் வங்கிகளின் நிலை சீராக உள்ளது என்று மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!