மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்களுக்கு விடுமுறை விட வேண்டும் என தேர்தல் ஆணைய தலைவர் வேண்டுகோள் வைத்துள்ளார்.
வாக்குப்பதிவு நாளில் விடுமுறை:
இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பானது மார்ச் 16ம் தேதி தேர்தல் ஆணைய தலைவர் சத்யபிரதா சாகு அவர்களால் வெளியிடப்பட்டது. இதன் படி ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை மக்களவை தேர்தலானது 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான மனு தாக்கல் ஆரம்பித்து தேர்தல் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் வாக்குப்பதிவு நாளின் போது ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.
மார்ச் 30 ல் பதிவுத்துறை அலுவலக செயல்பாடு – அரசின் முடிவு என்ன?
மேலும் இவ்விடுமுறையானது ஊதியத்துடன் விடப்பட வேண்டும் எனவும், விடுமுறை தராத நிறுவனங்கள் மீது தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கும் எனவும் முன்பே கூறப்பட்டு இருந்தது அனைவரும் அறிந்ததே. இதனை தொடர்ந்து வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்குமாறு தனியார் நிறுவனங்களுக்கு கட்டளையிட வேண்டி தொழிலாளர் நல ஆணையத்திற்கு மாநில தேர்தல் ஆணையர் கடிதம் எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி தேர்தல் அதிகாரிகளுக்கு அரசியல் கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.