வங்கிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு – மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவு!!
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு வங்கிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா தடுப்பு நடவடிக்கையாக இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் விதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த வகையில், பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களை அந்தந்த அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகிறது. ஈரோடு இடைத்தேர்தலை முன்னிட்டு அம்மாவட்டத்தில் உள்ள வங்கிகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பழனியில் கும்பாபிஷேகம், தைப்பூசம் முன்னிட்டு சிறப்பு ரயில் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதாவது, தேர்தலையொட்டி சட்ட விரோதமாக பணப்பரிவர்த்தனை செய்வதை தடுக்கும் விதமாக வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சந்தேகத்துக்கு இடமான வகையில் பணப் பரிவர்த்தனையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்தால் இது குறித்து தேர்தல் கட்டுப்பாட்டு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.