பழனியில் கும்பாபிஷேகம், தைப்பூசம் முன்னிட்டு சிறப்பு ரயில் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

0
பழனியில் கும்பாபிஷேகம், தைப்பூசம் முன்னிட்டு சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
பழனியில் கும்பாபிஷேகம், தைப்பூசம் முன்னிட்டு சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
பழனியில் கும்பாபிஷேகம், தைப்பூசம் முன்னிட்டு சிறப்பு ரயில் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

பழனி முருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு கோவை – திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்:

பழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள் என்பதால் பயணிகளின் நலன் கருதி சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் தொடா்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில், கோவை – திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மேலும் இது தொடா்பாக வெளியிட்ட அறிவிப்பில், பழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு, கோவை – திண்டுக்கல் இடையே வருகிற ஜனவரி 27, 28, 29 மற்றும் பிப்ரவரி 4, 5, 6 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தேதிகளில் காலை 9.20 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு காலை 11.43 மணிக்கு பழனியை சென்றடையும்.

BCC ஆவண பட சர்ச்சை .. நீடிக்கும் மாணவர்கள் போராட்டம் – பல்கலைக்கு 144 தடை உத்தரவு!

அதன்பின்பு பிற்பகல் 1 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, மறுமார்க்கத்தில் திண்டுக்கல்-கோவை சிறப்பு ரயில், மேற்கண்ட தேதிகளில் திண்டுக்கல்லில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மதியம் 3 மணிக்கு பழனியை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலானது, கிணத்துக்கடவு, போத்தனூா், கோமங்கலம், பொள்ளாச்சி, மைவாடி சாலை, உடுமலைப்பேட்டை, புஷ்பத்தூா், பழனி, மடத்துக்குளம், ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!