வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு – தேர்தல் ஆணையம் அதிரடி!

0
வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!

தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு தினத்தை முன்னிட்டு வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

முக்கிய உத்தரவு

தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. மேலும் தேர்தல் பணிகளை செய்ய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதாவது வாக்குப்பதிவு நடைபெறும் போது வாக்கு சாவடியில் அனைத்து நிகழ்வுகளுக்கும் வாக்குச்சாவடி தலைமை அலுவலரே பொறுப்பு ஆவார்.

UPSC ஆணையத்தில் 140+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு || உடனே விரையுங்கள்!

எனவே அவர் தன்னுடைய கடமைகளை தெரிந்து தனக்கு கீழ் பணிபுரியும் அலுவலர்களின் வேலைகளை தெரிந்து கொள்ள வேண்டும். வாக்குச்சாவடியில் மின்சாரம், குடிநீர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி போன்றவை இருக்கிறதா என பார்த்து தகவல் தெரிவிக்க வேண்டும். சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவை தொடங்கி மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவை முடிக்க வேண்டும். சற்று தாமதமாக தொடங்கினாலும், வாக்குப்பதிவு நேரத்தை நீடிக்க கூடாது. மாலை 6 மணிக்கு வரிசையில் நிற்கும் கடைசி வாக்காளரிடம் இருந்து டோக்கன் வழங்குவதை ஆரம்பித்து முதலில் நிற்பவர் வரை வழங்கி அனைவரையும் வாக்களிக்கச் செய்ய வேண்டும். டோக்கன் வழங்கிய பிறகு வருவோரை வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!