விஜய் டிவியில் ஜனவரி 17 முதல் ‘ஈரமான ரோஜாவே 2’ சீரியல் ஒளிபரப்பு – ரசிகர்கள் உற்சாகம்!
மக்களின் மனம் கவர்ந்த ‘ஈரமான ரோஜாவே’ சீரியலின் 2ம் பாகத்திற்கான ப்ரோமோ ஒன்று வெளியிடப்பட்ட நிலையில் இதன் புதிய எபிசோடுகளின் ஒளிபரப்பு ஜனவரி 17ம் தேதி முதல் துவங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈரமான ரோஜாவே
வழக்கமாக ஒரு திருமணத்தில் ஏற்படும் குழப்பங்களை முக்கிய கதைக்களமாக வைத்து ஒரு சீரியல் எடுக்கப்படுவது உண்டு. ஆனால் இப்போது ஒரு திருமணமே குழப்பமாக நடைபெற அதனால் ஏற்பட இருக்கும் பிரச்சனைகளை கருவாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது விஜய் டிவியின் ‘ஈரமான ரோஜாவே’ சீசன் 2 சீரியல். அதாவது விஜய் டிவியில் கடந்த 2019ம் ஆண்டு துவங்கி 2021ம் ஆண்டு வரை வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட சீரியல் ‘ஈரமான ரோஜாவே’.
“பிக் பாஸ்” வீட்டில் இருந்து வெளியேறி இன்னும் சொந்த ஊர் திரும்பாத தாமரை – கணவர் சொன்ன விளக்கம்!
இந்த நெடுந்தொடரில் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கதாநாயகி, தான் விரும்பிய நபரின் தம்பிக்கு ஜோடியாகிறார். பிடிக்காமல் நடைபெற்ற இந்த திருமண வாழ்க்கை இவர்கள் இருவரையும் எப்படி ஒன்று சேர்த்தது என்பதை கதைக்களமாக வைத்து சுமார் 808 எபிசோடுகள் வரை ஒளிபரப்பானது ‘ஈரமான ரோஜாவே’ சீரியல். இத்தொடரின் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிகர் திரவியம் மற்றும் பவித்ரா ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்போது இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடி முடிந்து சில மாதங்கள் கழித்துள்ள நிலையில் ‘ஈரமான ரோஜாவே’ சீரியலின் 2ம் பாகம் தற்போது உருவாகி இருக்கிறது. இம்முறை கதாநாயகனின் திருமணத்தின் போது கதாநாயகி காவ்யாவின் அக்கா கடத்தப்பட அக்காவுக்கு பதிலாக காவ்யா கதாநாயகனை திருமணம் செய்து கொள்கிறார். அதே போல காவ்யாவை காதலிக்கும் ஜீவா, தான் காப்பாற்றி கூட்டி வந்த காவ்யாவின் அக்காவை திருமணம் செய்து கொள்கிறார்.
“பிக் பாஸ்” வீட்டில் இருந்து வெளியேறி இன்னும் சொந்த ஊர் திரும்பாத தாமரை – கணவர் சொன்ன விளக்கம்!
இந்த திருமண வாழ்க்கை எப்படி இந்த காதல் ஜோடிகளை பாதிக்கப்போகிறது, எப்படி இந்த வாழ்க்கையை இவர்கள் இருவரும் ஏற்றுக்கொள்ள போகிறார்கள் என்பது தான் ‘ஈரமான ரோஜாவே 2’ சீரியலின் கதைக்களம் ஆக ஒளிபரப்பாக உள்ளது. இப்போது ‘ஈரமான ரோஜாவே 2’ சீரியலில் நடிகர் சித்தார்த், திரவியம், கேப்ரியல்லா ஆகியோருடன் புது முகம் ஒருவர் அறிமுகமாகிறார். இந்த சீரியல் வரும் ஜனவரி 17ம் தேதி முதல் தினசரி இரவு 10 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.