TNPSC தேர்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்? கல்வித் தகுதி, பாடத்திட்டம் & முழு விவரம் இதோ!
தமிழகத்தில் அரசு பணிகள் தேர்வாணையத்தால் நடத்தப்படும் TNPSC குரூப் தேர்வுக்கான அறிவிப்பு வெளியான வண்ணம் உள்ளது. இந்த நிலையில் இத்தேர்வு குறித்த பாடத்திட்டம், கல்வித் தகுதி குறித்த முழு விவரங்களை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
குரூப் 2:
தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் TNPSC (அரசு பணிகள் தேர்வாணையம்) போட்டி தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிரப்பட்டு வருகிறது. நடப்பாண்டு 32 வகையான போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்திருந்தது. 5831 காலிப்பணியிடங்கள் குரூப் 2 தேர்வின் மூலம் நிரப்பப்படும் மேலும் இந்த 2, 2A தேர்வுகள் குறித்த அறிவிப்பு வரும் 23ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து மே 21 ஆம் தேதி தேர்வுகள் நடத்தப்பட்டு, ஜூன் மாத இறுதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்!
மேலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 2023 ம் ஆண்டு கலந்தாய்வு நடைபெறும். இந்த குருப் 2 தேர்வை எழுத விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வானது முதல்நிலை, முதன்மை நிலை என்று இரு கட்டமாக நடைபெறும். முதல்நிலைத் தேர்வு என்பது கொள்குறி வகைத் தேர்வாக இருக்கும். அடுத்ததாக முதன்மைத் தேர்வு என்பது விரிவான எழுத்துத் தேர்வாக நடைபெறும். தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் தேர்வை எழுதலாம்.
தமிழகத்தில் பள்ளிகள், அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு – முழு விவரம் இதோ!
அடுத்த மாதம் குரூப் 4 குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வை எழுதுவோர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரே ஒரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது.மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். தற்போது தமிழ் மொழி சேர்க்கப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தை திட்டமிட்டு படித்தால் எளிதாக வெற்றி பெறலாம்.