அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்!
கொரோனா பெருந்தொற்று காரணமாக அதிகமான பொருளாதார நெருக்கடியை அனைத்து மக்களும் சந்தித்தனர். இந்நிலையில் ஏழைகளுக்கு இலவச ரேஷன் வசதியை அரசாங்கம் வழங்கியது. இதன் கீழ் நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் இலவச ரேஷன் வசதியின் பயனைப் பெற்றனர்.
கட்டணமில்லா தொலைபேசி எண்:
நாடு முழுவதும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கார்டு மூலம் மலிவான விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இன்றைய காலகட்டங்களில் சிலிண்டர் வாங்க அடையாள ஆவணமாக ரேஷன் கார்டு உள்ளது. குடும்பத்தின் வருவாயை பொறுத்து ரேஷன் கார்டு 5 வகைகளில் உள்ளது. மேலும் கொரோனா காலகட்டத்தில் பொது முடக்கத்தால் சாமானிய மக்கள் தான் அதிகம் பாதிப்புக்கு உள்ளாளனர் . அவர்கள் பயன் பெறும் விதத்தில் மத்திய அரசால் இலவச ரேஷன் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வீட்டு வாடகைப்படி சம்பளத்தில் சேர்ப்பு!
ஆனால் நியாய விலை கடைகளில் ரேஷன் கடை பணியாளர்கள், ரேஷன் கார்டுதாரர்களுக்கு எடைக்கு குறைவான ரேஷன் பொருட்களை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டு குறித்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை அடிப்படையில் மத்திய அரசு பல்வேறு மாநிலங்களுக்கு இலவச தொலைபேசி எண்களை வழங்கியுள்ளது. இந்த இலவச தொலைபேசி எண்களை பயன்படுத்தி குறைவான ரேஷன் பொருட்கள் வழங்குபவர்கள் மீது புகார் அளிக்கலாம்.
தமிழகத்தில் பள்ளிகள், அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு – முழு விவரம் இதோ!
அந்த வகையில் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் குறைவான இலவச ரேஷன் பொருட்களை விநியோகித்தல் 1800-425-5901 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மேலும் புதுச்சேரி யூனியன் பிரதேச மக்கள் 1800-425-1082 என்ற எண்ணை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இது குறித்து கூடுதல் விபரங்கள் அறிய தேசிய உணவுப் பாதுகாப்பு போபோர்ட்டலின் https://nfsa.gov.in/portal/