சீனாவில் குறைந்து வரும் கொரோனா கட்டுப்பாடுகள் – Foxconn’s மூடலின் எதிரொலி!
கொரோனா பாதிப்பு நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த காரணத்தால் சீனாவில் அதிகரிக்கப்பட்டு வந்த கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளில் சிறிது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் தளர்வு:
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் சீனாவில் இருந்து தான் பரவ தொடங்கியது. இதனால் உலகில் இதுவரை இல்லாத அளவிற்கான பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகின் மற்ற நாடுகள் அனைத்தும் கொரோனாவின் பிடியில் இருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில், சீனாவில் மட்டும் கொரோனா பரவல் அதிகரித்து வந்தது.
Follow our Instagram for more Latest Updates
தமிழக மின் பயனர்களுக்கு முக்கிய உத்தரவு – மின் இணைப்புடன் டிரிப்பர் கருவி கட்டாயம்!
Exams Daily Mobile App Download
இதனால் சீன அரசு கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தொடங்கியது. அதிக கட்டுப்பாடுகள் காரணமாக நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. குறிப்பாக, ஆப்பிளின் மிகப்பெரிய ஐபோன் ஆலை சீனாவின் Zhengzhou நகரில் தான் உள்ளது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விதிக்கப்பட்டுள்ள நீண்ட ஊரடங்கின் காரணமாக அந்த ஆலை மூடப்படுகிறது. இது போன்று மற்ற நிறுவனங்களும் அதிரடி முடிவை எடுக்க வாய்ப்புகள் உள்ளதால், தற்போது சீனாவில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.