தமிழக மின் பயனர்களுக்கு முக்கிய உத்தரவு – மின் இணைப்புடன் டிரிப்பர் கருவி கட்டாயம்!
தமிழக மின் வாரியம் மக்களுக்கு தடையில்லா மற்றும் பாதுகாப்பான மின்சாரத்தை வழங்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இந்த நிலையில் மின் விபத்தை தவிர்க்கும் வகையில் டிரிப்பர் கருவி பொருத்த உத்தரவிட்டுள்ளது.
மின் பாதுகாப்பு:
தமிழக மின்வாரியம் பாதுகாப்பான மின் விநியோகத்தை வழங்க மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அப்போது பழுதடைந்த மின் கம்பிகள், மின் வயர்கள் போன்றவை மாற்றபடுகிறது. மேலும் தெருக்களில் மின் பாதைக்கு இடையூறாக உள்ள உயர்ந்த மரங்கள் அவற்றின் மரத்தின் கிளைகள் போன்றவை அகற்றப்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
அதனைத்தொடர்ந்து மின் பயனர்களுக்கு அவ்வபோது மின் வாரியம் சார்பில் மின் பாதுகாப்பு தொடர்பான சில அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மின் கசிவால் ஏற்படும் இறப்புகளை தடுக்க டிரிப்பர் கருவி பொருத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்கள் மற்றும் அதிக வெப்பம் நிலவும் காலங்களில் எதிர்பாராத விதமாக சில நேரங்களில் மின்கசிவு ஏற்பட்டு அதனால் விபத்துகள் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
டிச.02 முதல் 3 நாட்களுக்கு மதுக்கடை மூடல் – வெளியான அதிரடி உத்தரவு!!
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் இதுபோன்ற விபத்துகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தவிர்க்கும் வகையில் வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பண்ணைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மின் நுகர்வோர்கள் கட்டாயம் டிரிப்பர் கருவி பொருத்த வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.