தமிழகத்தில் மின் நுகர்வோர் எண் – ஆதார் இணைப்பு – பிப். 15 ம் தேதி கடைசி நாள்!
தமிழகத்தில் மின் பயனர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் பிப்ரவரி 15 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
மின் இணைப்பு – ஆதார்:
மின் நுகர்வோர்களின் விவரங்களை சேகரிக்கும் நோக்கில் மின்வாரியம் மின் பயனர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதலின் பேரில் இப்பணி தமிழகம் முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இப்பணியை மின் பயனர்கள் ஆன்லைன் வாயிலாகவும் மின்வாரிய அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் வாயிலாகவும் மேற்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த சி. பி. ராதா கிருஷ்ணன் ஜார்கண்ட் ஆளுநராக நியமனம் – ஜனாதிபதி உத்தரவு!
ஆரம்பத்தில் ஆன்லைன் வாயிலாக ஆதார் மின் இணைப்பு பணியை மேற்கொள்ளும் போது ஏற்பட்ட சர்வர் கோளாறு காரணமாக ஏராளமான மின் பயனர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டனர். இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக இணையதள கோளாறு சரி செய்யப்பட்டது. இந்த சர்வர் கோளாறு பிரச்சனையை கருத்தில் கொண்டு மின் பயனர்களுக்கு ஆதாருடன் மின் இணைப்பு பணியை மேற்கொள்ள கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
முதலில் ஜனவரி 31 வரை வழங்கப்பட்ட கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு பிப்ரவரி 15ஆம் தேதி வரை மின் நுகர்வோர் எண் – ஆதார் இணைப்பு பணியை மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த கால அவகாசம் முடிவடைய இன்னும் 3 நாட்களே மீதமுள்ள நிலையில் இன்னும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காமல் உள்ள மின் நுகர்வோர்கள் விரைந்து பணியை முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.