நோ பார்க்கிங்கில் வாகனம் நிறுத்தினால் ஓட்டுநர் உரிமம் ரத்து – புதிய அறிவிப்பு!
வேலுாரில் நோ பார்க்கிங் இடங்களில் வாகனங்களை நிறுத்தி 3 முறை பிடிபட்டால் ஓட்டுநர் உரிமம் தானாகவே ரத்து ஆகி விடும் என போக்குவரத்து காவல்த்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஓட்டுநர் உரிமம் :
சாலையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு பல்வேறு சாலை விதிமுறைகள் உள்ளது. அவற்றை பின்பற்றி வாகனம் ஓட்டும் போது பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படுகிறது. ஆனால் பெரும்பாலானோர் அவசர வேலைகள் காரணமாக சாலை விதிகளை பின்பற்றுவது இல்லை. இதனால் ஏராளமான விபத்துகள் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயமாகும். முறையாக வாகன பயிற்சி பெற்று ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற 18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும்.
சுற்றுலாவுக்கு ரயில் பெட்டிகள் குத்தகைக்கு விடப்படும் – ரயில்வே திட்டம்!
சாலை விதிகளை மீறுவோர் மீது போக்குவரத்து காவல்துறை சட்டப்படி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில இடங்களில் போக்குவரத்து நெரிசலை தடுக்கவும், சாலையில் வாகனங்கள் எவ்வித இடையூறும் இன்று செல்லும் வகையில் “நோ பார்க்கிங்” என்ற போர்டு வைக்கப்பட்டிருக்கும். அந்த இடங்களில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. அதை மீறி வாகனத்தை நிறுத்தினால் போக்குவரத்து துறை காவலர்களால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.
நாடு முழுவதும் நாளை NEET நுழைவுத்தேர்வு – தமிழகத்தில் கூடுதல் மையங்கள் ஒதுக்கீடு!
வேலுாரில் எல்லா நேரங்களிலும் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. இது குறித்து ஆய்வு மேற்கொள்ளும் போது நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்துவதே இதற்கு காரணம் என கண்டுபிடித்தனர். எனவே இதனை தடுக்கும் பொருட்டு வேலுாரில் நோ பார்க்கிங் இடங்களில் வாகனங்களை நிறுத்தி 3 முறை பிடிபட்டால் ஓட்டுநர் உரிமம் தானாகவே ரத்து ஆகி விடும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அபராதம் செலுத்தும் விவரம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் வேலூர் ஏ.எஸ்.பி தெரிவித்துள்ளார்.