நாடு முழுவதும் நாளை NEET நுழைவுத்தேர்வு – தமிழகத்தில் கூடுதல் மையங்கள் ஒதுக்கீடு!
இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு நாளை (செப்டம்பர் 12) நடைபெற இருக்கும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கவனத்தில் கொண்டு தமிழகத்தில் கூடுதல் மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் மையங்கள்
இந்தியாவில் தற்போது பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை பயிலுவதற்கு தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் JEE மற்றும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் மருத்துவப்படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்களுக்கான நீட் நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மட்டுமே MBBS, பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளை பயில மருத்துவ கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கும்.
LIC பாலிசி உடன் பான் கார்டு இணைப்பு – எளிய வழிமுறைகள் இதோ!
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வானது நாளை (செப்டம்பர் 12) மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட இருக்கிறது. அதன் படி தமிழகத்திலும் இந்த நுழைவுத் தேர்வுகள் நாளை (செப்டம்பர் 12) துவங்க உள்ளது. இதனிடையே, தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா 3 ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதால் வழக்கத்தை விட சற்று அதிகமான தேர்வு மையங்களை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை – ஆணையர் எச்சரிக்கை!
மேலும் நீட் மையங்களுக்கு வரும் மாணவர்கள் ஹால் டிக்கெட், அடையாள அட்டை, புகைப்படம் தவிர வேறு எந்த பொருட்களையும் எடுத்துச் செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுகளை எழுதுவதற்கு சுமார் 1,12,889 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் 19,867 பேர் தமிழ்வழியில் தேர்வுகளை எழுதவுள்ளனர். குறிப்பாக 11,236 அரசுப்பள்ளி மாணவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.