அஞ்சல் நிலையத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு டிரைவர் வேலை – ரூ.63,200 வரை சம்பளம்!
இந்திய அஞ்சல் துறை ஸ்டாஃப் கார் ஓட்டுநர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கான 17 காலியிடங்களை நிரப்பும் பணி தற்போது தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
ஓட்டுநர் வேலை:
இந்திய அஞ்சல் துறை சார்பில் பல வேலைவாய்ப்புகளுக்கான விண்ணப்பங்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டுதான் இருக்கிறது. தற்போது இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஸ்டாஃப் கார் டிரைவர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த துறையில் மொத்தமாக 17 காலியிடங்கள் உள்ளன. கோயம்புத்தூர் மெயில் மோட்டார் சர்வீஸ் பிரிவில் 11 காலியிடமும், ஈரோடு பிரிவில் 2 காலியிடமும், நீலகிரி பிரிவில் 1 காலியிடமும், சேலம் மேற்கு பிரிவில் 2 காலியிடமும், திருப்பூர் பிரிவில் 1 காலியிடமும் உள்ளது.
இந்த கார் ஓட்டுநர் வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் அந்த விண்ணப்பதாரர் கண்டிப்பாக இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இதுமட்டுமல்லாமல் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது கார் ஓட்டுநராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். நேர்முக தேர்வின் மூலமாகவே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
உக்ரைனில் வார இறுதி ஊரடங்கு உத்தரவு நீக்கம் – இந்திய மாணவர்களை மீட்க நடவடிக்கை தீவிரம்!
மேலும் 18 முதல் 56 வயதிற்குள் இருக்கும் அனைவருமே இந்த ஓட்டுநர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களோடு தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், தொழில்நுட்ப தகுதி சான்றிதழ் என அனைத்தையும் இணைக்க வேண்டும். ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் “The Manager, Mail Motor Service, Goods Shed Roads, Coimbatore, 641001” என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.