உக்ரைனில் வார இறுதி ஊரடங்கு உத்தரவு நீக்கம் – இந்திய மாணவர்களை மீட்க நடவடிக்கை தீவிரம்!

0
உக்ரைனில் வார இறுதி ஊரடங்கு உத்தரவு நீக்கம் - இந்திய மாணவர்களை மீட்க நடவடிக்கை தீவிரம்!
உக்ரைனில் வார இறுதி ஊரடங்கு உத்தரவு நீக்கம் - இந்திய மாணவர்களை மீட்க நடவடிக்கை தீவிரம்!
உக்ரைனில் வார இறுதி ஊரடங்கு உத்தரவு நீக்கம் – இந்திய மாணவர்களை மீட்க நடவடிக்கை தீவிரம்!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே நடைபெற்று வரும் போருக்கு மத்தியில் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் உக்ரைனின் தலைநகர் கீய்வ்வில் அமைந்துள்ள ரயில் நிலையத்திற்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீக்கம்

உலக நாடுகள் மத்தியில் பேரதிர்ச்சியை உருவாக்கி இருக்கும் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இன்று (பிப்.28) இரண்டு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட இருக்கிறது. முன்னதாக, உக்ரைன் நாட்டை தன்னுடன் இணைத்துக்கொள்ள விரும்பிய ரஷ்யா அந்நாட்டின் மீது படையெடுப்புகளை நடத்தியது. இந்த போரில் உக்ரைனின் ஆயுத அளவை விட 3 மடங்கு அதிகளவு பலம் படைத்த ரஷ்யாவின் பிடியை தாக்குப்பிடிக்க முடியாமல் உக்ரைன் திணறியது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக் அறிவிப்பு – அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை!

குறிப்பாக இப்போரில் உக்ரைனின் சில முக்கிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்யா, தலைநகர் கீய்வ்வை பிடிக்கும் முயற்சியில் இறங்கியது. அதனால் 18 முதல் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்கள் உக்ரனை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு பொது மக்களும் உக்ரைன் ராணுவத்துடன் சேர்ந்து நாட்டை காக்கும் பணிகளில் இறங்கினர். இந்த போரில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த இக்கட்டான சூழலில் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை காப்பாறுவதற்காக ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில் உக்ரைனில் தற்போது வார இறுதி ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய மாணவர்கள் ஹங்கேரி, போலந்து, ருமேனியா, ஸ்லோவாக் குடியரசு உள்ளிட்ட உக்ரைனின் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ‘ஆபரேஷன் கங்கா’ நடவடிக்கையின் கீழ் மாணவர்களை இந்தியாவுக்கு திரும்பக் கொண்டு வருவதற்காக இன்று (பிப்.28) 249 பேருடன் காலை உக்ரைனில் இருந்து ஐந்தாவது விமானம் புது தில்லியில் தரையிறங்கியது. அதே போல மற்றொரு விமானம் இன்று அதிகாலை ருமேனியாவின் புக்கரெஸ்டில் இருந்து புறப்பட்டது.

தபால் நிலையங்களில் தங்கப் பத்திரம் விற்பனை இன்று முதல் தொடக்கம் – கடைசி நாள் மார்ச் 4 !

இப்போது உக்ரைனில் மீதமிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இது குறித்து உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘கீய்வ்வில் வார இறுதி ஊரடங்கு நீக்கப்பட்டது. அனைத்து மாணவர்களும் மேற்குப் பகுதிகளுக்கான பயணத்திற்காக ரயில் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் உக்ரைனில் இன்னும் 16,000 இந்திய மாணவர்கள் சிக்கித் தவிக்கும் நிலையில் அவர்களை மீட்பதற்காக உக்ரைனுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் அனைத்து நாடுகளிலும் உள்ள ஹெல்ப்லைன் எண்களை அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!