உள்நாட்டு விமான சேவை கட்டண உயர்வு – மத்திய அரசு அனுமதி!!
இந்திய உள்நாட்டு விமான சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக விமான போக்குவரத்து துறையில் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய இந்த முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
கட்டண உயர்வு:
மத்திய அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி, உள்நாட்டு விமான சேவை கட்டணங்களில் குறைந்தபட்ச 10% முதல் அதிகபட்சம் 30% வரை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தற்போது குறைந்த எண்ணிக்கையிலான விமானங்களின் இயக்கத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதன் காரணமாக டிக்கெட் விலையை கட்டுக்குள் வைத்திருக்க உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களின் டிக்கெட் விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது.
அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் காலிப்பணியிடங்கள் – பிப்ரவரி 25 நேர்முகத் தேர்வு!!
மே 21 அன்று, டி.ஜி.சி.ஏ மத்திய அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டண வரம்புகளை வெளியிட்டது. அதன்படி 40 நிமிடங்களுக்கும் குறைவான உள்நாட்டு விமானங்களுக்கு குறைந்தது ரூ.2,000 முதல் அதிகபட்சம் ரூ.6,000 வரை கட்டணம் நிர்ணயம் செய்யலாம். 40-60 நிமிடங்களுக்கு ரூ.2,500 மற்றும் ரூ.7,500, 60-90 நிமிடங்களுக்கு ரூ.3,000 மற்றும் ரூ.9,000, 90-120 நிமிடங்களுக்கு ரூ.3,500 மற்றும் ரூ.10,000, 120-150 நிமிடங்களுக்கு ரூ.4,500 மற்றும் ரூ.13,000, 150-180 நிமிடங்களுக்கு ரூ.5,500 மற்றும் ரூ.15,700 மற்றும் 180- க்கு 210 நிமிடங்கள் ரூ.6,500 மற்றும் ரூ.18,600 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மத்திய அரசின் தற்போதைய அறிக்கை உறுதி செய்யப்பட்டால், 180-210 பயண நிமிட விமானத்தில் இப்போது ரூ .18,600 ஆக உள்ள கட்டணம் 30% அதிகரித்து ரூ .24,200 ஆக நிர்யணம் செய்யப்படும். இது ரூ .5,600 டிக்கெட் விலை அதிகரிப்பை காட்டுகிறது. மேலும் குறைந்தபட்சம் விலை 10% அதிகரிக்கும், அதாவது ரூ.200 விலை உயரும் என கூறப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்