ரேஷன் கடைகளில் தீபாவளி பரிசு வழங்க ஏற்பாடுகள் தீவிரம் – உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் மக்கள்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி மகாராஷ்டிரா மாநில அரசு பரிசு ஒன்றை அளிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பரிசு:
மகாராஷ்டிரா மாநிலத்தில் 1.7 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். மக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் ரூ. 100-க்கு ஒரு கிலோ ரவா, சர்க்கரை, துவரம் பருப்பு மற்றும் ஒரு லிட்டர் பாமாயில் ஆகிய பொருட்களை அளிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் இதற்கான அறிவிப்பு அக்டோபர் 4-ம் தேதி வெளியாகியது.
Follow our Instagram for more Latest Updates
அறிவிப்பு வெளியாகி 2 வாரங்கள் ஆகியுள்ள நிலையில், தீபாவளி பரிசு வழங்குவது இன்னும் தொடங்கப்படவில்லை. அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில், மிகவும் குறைந்த நாட்கள் தான் இடையில் உள்ளது. இந்நிலையில், அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு, அதன்பிறகு மக்களுக்கு விநியோகிக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை நேற்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை (20.10.2022) மின்தடை செய்யப்படும் பகுதிகள் – முழு விவரம் இதோ!
Exams Daily Mobile App Download
தொகுப்பில் அளிக்கப்பட உள்ள பொருட்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வர உள்ளதால், தாமதமாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக மக்களுக்கு பொருட்கள் முழுமையாக அளிக்கப்பட்டு விடும் என்று அரசு உறுதி அளித்துள்ளது. இந்த அறிவிப்பால் அரசுக்கு கூடுதலாக ரூ.500 கோடி செலவு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.