தமிழக அரசு சார்பில் பகுதிநேர ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணம் – ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை!
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் நிரந்தர ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்று ஆசிரியர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்திகுமார் கோரிக்கை வைத்துள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்கள்:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி மற்றும் தையல் பாட பிரிவுகளுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக பகுதிநேரத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அதாவது அவர்கள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் பள்ளிக்கு வருகை தந்தால் போதும். அவ்வாறு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய கோரி பல்வேறு போராட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் தொடரப்பட்டன.
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட், 3% அகவிலைப்படி உயர்வு – முக்கிய அறிவிப்பு!
இந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதம் 7,500 வீதம் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 30% சம்பளம் உயர்த்தி 10,000 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் SSA என்று கூறப்படும் கல்வி திட்டத்தின் கீழ் பணி நியமனம் செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து திமுக தேர்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று பிரச்சாரம் செய்திருந்தது. ஆனால், இது குறித்த அறிவிப்பு தற்போது வரை வெளியிடப்படவில்லை.
மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, தீபாவளி போனஸ் – சூப்பர் அறிவிப்பு!
இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை வருவதால் இந்த 10 ஆயிரம் பணத்தை வைத்து எப்படி தீபாவளி கொண்டாட முடியும். அதனால் நிரந்தர ஆசிரியர்களுக்கு பண்டிகை நேரத்தில் முன்பணம் வழங்கப்படுவது போல் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் முன்பணம் வழங்க வேண்டும் என்று பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இதுவரை சம்பளத்தை தவிர வேறு எதுவும் வழங்கப்படவில்லை. பணி நிரந்தரம் செய்தால் இதுபோன்ற கோரிக்கை வைக்க அவசியம் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.