தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தீபாவளிக்கு முன்னதாக பொருட்கள் விநியோகம்!
தீபாவளி பண்டிகையின் காரணமாக ரேஷன் கடைகளில் முன்னதாகவே பொருட்கள் வழங்க முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
ரேஷன் கடை:
அன்றாட வாழ்வின் அத்தியாவசிய தேவையான உணவு அனைவரும் கிடைக்க வேண்டும் என்பதற்காக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் அரிசி, பருப்பு, சர்க்கரை முதலியன ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பலர் பயனடைந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது சிவகங்கை மாவட்டத்தில் 4 லட்சத்து 14 ஆயிரத்து 805 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டுகளுக்கு பொருட்கள் வழங்குவதற்காக 648 முழு நேர கடைகள், 179 பகுதி நேர கடைகள் இயங்கி வருகிறது.
TCS, Infosys, Wipro & HCL நிறுவனங்களில் பெண்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
இதில் மாவட்டத்தில் 6311 டன் அரிசி, 559 டன் சர்க்கரை, 630 டன் கோதுமை, 257 டன் துவரம் பருப்பு, பாமாயில் 3 லட்சத்து 30 ஆயிரத்து 946 பாக்கெட்கள், 144 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. எனவே தமிழக அரசு நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை காலை 8:00 முதல் இரவு 7:00 மணி வரை ரேஷன் கடைகள் செயல்படும் என அறிவித்துள்ளது.
தமிழக அரசு வழங்கும் 14 நாட்கள் தற்செயல் விடுமுறை – ஊழியர்கள் கவனத்திற்கு!
இதனை பயன்படுத்தி மக்கள் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து பொருட்களும் நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அக்டோபர் 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுவாக ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் 10ம் தேதிக்கு பின்னரே பொருட்கள் வந்து சேரும். ஆனால் தற்போது பண்டிகை காலம் என்பதால் முன்னதாகவே கடைகளுக்கு பொருட்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீபாவளிக்கு முன்னதாக பொருட்களை பெற முடியாதவர்கள் நவம்பர் 8ம் தேதிக்கு பின்னர் பெற்றுக்கொள்ளலாம் என கூறப்படுகிறது.