தமிழக ரேஷனில் உளுந்து & மசாலா பொருட்கள் விநியோகம் – அமைச்சர் அறிவிப்பு!
தமிழக ரேஷன் கடைகளில் மானிய விலையில் மீண்டும் உளுந்தம் பருப்பு மற்றும் மசாலாப் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
மானிய விலை பொருட்கள்:
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் சில தினங்களுக்கு முன் கொரோனா தடுப்பு வழிமுறைகள் உடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாள்தோறும் பல்வேறு துறை ரீதியான விவாதங்கள் எழுப்பப்பட்டு, அமைச்சர்களின் முக்கிய அறிவிப்புகள் உடன் நிறைவடைந்து வருகிறது. இந்த நிலையில், கூட்டுறவு மற்றும் பொதுப்பணித்துறை சார்ந்த விவாதங்கள் நடைபெற்றது. அப்போது அதற்கு பதில் தர உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி எழுந்து பேசினார்.
SBI வங்கியில் லாகின் செய்யாமல் கணக்கு விவரங்கள் சரிபார்ப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இந்த நிலையில் புதிய அரசு ஆட்சி அமைத்த போது மாநிலத்தில் கொரோனா பரவல் என்பது அதிகமாக காணப்பட்டது. இதனை அடுத்து, மக்களின் துயரை போக்க கொரோனா கால நிவாரண நிதியாக, நான்காயிரம் ரூபாயை இரண்டு தவணையாகவும், 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையையும் மாநில அரசு வழங்கியது. இந்த திட்டங்கள் அனைத்தும் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதி முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. இதனால் 2,90,00,000 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
TN Job “FB Group” Join Now
மேலும் அவர் பேசியதாவது, முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் ரேஷனில் குறைந்த விலையில் மக்களுக்கு சமையல் பொருட்களான எண்ணெய், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை 2007-ல் தொடங்கி நடைமுறைப்படுத்தி வைத்தார். ஆனால், கடந்த ஆட்சியில் அந்த திட்டத்தில் இருந்து உளுந்தம் பருப்பு, கோதுமை மாவு, மளிகை பொருட்கள் போன்றவை காணாமல் போனதாக குற்றம் சாட்டினார். இதனை அடுத்து இந்த விட்டு போன பொருட்கள் தமிழக ரேஷன் கடைகளில் மீண்டும் மானிய விலையில் வழங்கப்படும் என உறுதியளித்தார். தற்போது, இந்த அறிவிப்பு மக்களிடையே சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.