தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) கலைப்பு? அரசுக்கு வலியுறுத்தல்!
தமிழகத்தில் செயல்பட்டு வரும் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித்துறைக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட முக்கிய பணிகளில் ஈடுபட்டு வந்த ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்பட உள்ளதாக எழுந்த செய்திகளுக்கு தற்போது விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம்:
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தாலும், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலும் கலைக்கப்பட உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வாரியம் மூலம் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள் பணியிடத்தில் ஏற்படும் சிக்கல்கள் காரணமாக பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இஸ்ரேலின் புதிய பிரதமராக நஃப்தலி பென்னட் பதவியேற்பு!
இதனால் ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைத்து விட்டு, அதில் மேற்கொள்ளப்படும் பணிகளை TNPSC யிடம் வழங்க அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அளித்துள்ள பேட்டியில் இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதத்தில் ஒரு செய்தியை அளித்துள்ளார். மேலும் போட்டித்தேர்வு பயிற்சியாளர் நடராஜ் கூறுகையில், ‘கடந்த ஆண்டுகளில் பல்வேறு பணிகளில் சிறப்பான பங்களிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளிப்படுத்தியுள்ளது.
TN Job “FB Group” Join Now
இருப்பினும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு மட்டும் தான் பிரச்சனையாக மாறியது. ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைக்க வேண்டும் என அரசு எடுத்த முடிவு தவறானது. இதனால் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இது ஏமாற்றத்தை உண்டாக்கும்’ என கூறியுள்ளார். மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைப்பதற்கு பதிலாக, அதை மேலும் வலுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.