தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை – இன்றே கடைசி நாள்!
தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று (ஆகஸ்ட் 5) கடைசி நாள் ஆகும்.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. புதிய கல்வியாண்டு ஜூன் 14ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் பல கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன.
தீவிரமெடுக்கும் கொரோனா – சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்?
இந்த கல்லூரிகளில் தொழில்நுட்ப பட்டய (டிப்ளமோ) படிப்புகளுக்கு 18,120 இடங்கள் உள்ளன. அதற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு ஆன்லைன் மூலமாக தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. முதலாம் ஆண்டு பகுதி நேர படிப்பில் சேர ஜூலை 28 ஆம் தேதி வரை விண்ணப்ப பதிவு நடைபெற்றது. தற்போது 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது.
TN Job “FB Group” Join Now
இதற்கான விண்ணப்பங்கள் அனுப்ப இன்று (ஆகஸ்ட் 5) கடைசி நாள் ஆகும். இந்த படிப்பில் சேர தகுதி மற்றும் ஆர்வம் உள்ள மாணவர்கள் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் அதிகாரப்பூர்வ https://tngptc.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும் இணையதள வசதி இல்லாதவர்கள் மாவட்ட சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த மையங்களின் பட்டியல் www.tngptc.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.