தீவிரமெடுக்கும் கொரோனா – சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்?
மீண்டும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் திருப்பூர் மற்றும் கோவையில் பல்வேறு புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதே போல் சென்னையிலும் கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்படும் என்ற கேள்விக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பதில் அளித்துள்ளார்.
கட்டுப்பாடுகள்:
கொரோனா பெரும் தொற்றின் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டது. தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் நோய் தடுப்பு நெறிமுறைகளை பின்பற்ற தவறியதன் விளைவாக தற்போது நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
திருச்சி பாரதிதாசன் பல்கலை M.Phil., மாணவர் சேர்க்கை – அக்டோபர் 29 கடைசி நாள்!
தமிழகத்தில் திருப்பூர், கோவை போன்ற பகுதிகளில் நாளுக்கு நாள் நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் பல புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் சுற்றுலா தளங்கள் ஆகியவற்றை கண்டறிந்து அவற்றிற்கு தடை விதிக்க மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் அதிகாரம் வழங்கியுள்ளார். இருப்பினும் நோய் தொற்று பரவும் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
திருப்பூர் மற்றும் கோவை ஆகிய பகுதிகளை தொடர்ந்து அடுத்ததாக சென்னையில் நோய் பரவும் விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே திருப்பூரில் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டது போல சென்னையிலும் புதிய விதிமுறைகள் விதிக்கப்படும் என்ற கேள்விகள் எழுந்த நிலையில் சென்னையில் கொரோனாவின் தீவிரத்தை பொறுத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் கூறியுள்ளார்.