திருவள்ளூர் சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2021 – உடனே விரையுங்கள்
திருவள்ளூர் மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Mid Level Health Care Provider பணிக்கான 123 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இதன் மூலம் பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- திருவள்ளூர் மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் வெளியாகியுள்ள அறிவிப்பில் Mid Level Health Care Provider பணிக்கு 123 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் DGNM அல்லது BSc Nursing படித்திருக்க வேண்டும் என அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ தளத்தை பார்வையிடவும்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
- விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.15.12.2021 ம் தேதிக்கு பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முகவர்:-
செயற் செயலாளர் / துணை இயக்குநர் சுகாதார பணிகள் , மாவட்ட நலவாழ்வு சங்கம் அலுவலகம் (District Health Society), 54/5,ஆசூரி தெரு,திருவள்ளூர் மாவட்டம் -602 001