DFCCIL ரயில்வே நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
Dy. CPM/PM(Civil) மற்றும் AGM/JGM/DGM ஆகிய பணியிடங்களை நிரப்ப சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வம் உள்ளவர்கள் இப்பணிக்கு அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | DFCCIL |
பணியின் பெயர் | Dy. CPM/PM(Civil) மற்றும் AGM/JGM/DGM |
பணியிடங்கள் | 04 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Within 15 Days |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
DFCCIL ரயில்வே நிறுவன காலிப்பணியிடங்கள்:
- Dy. CPM/PM(Civil) – 03 பணியிடங்கள்
- AGM/JGM/DGM – 01 பணியிடம்
DY. CPM (AGM) தகுதிகள்:
இந்த DFCCIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் Group A அல்லது பணிக்கு தொடர்பான ஒத்த பணிகளில் குறைந்தது 12 ஆண்டுகள் (அல்லது) PSU நிறுவனத்தில் Rs.90000-240000 (IDA) E6 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பணிகளில் 04 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
CDAC நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு 2023 – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
DY. CPM (JGM) தகுதிகள்:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் Group A அல்லது பணிக்கு தொடர்பான ஒத்த பணிகளில் குறைந்தது 12 ஆண்டுகள் (அல்லது) PSU நிறுவனத்தில் Rs.80000-220000 (IDA) E5 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பணிகளில் 04 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
ஊதியம்:
பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
DFCCIL பணிக்கான தேர்வு செயல்முறை:
பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.