DFCCIL நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கான வேலை – தேர்வு கிடையாது…!
பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (DFCCIL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Dy. CPM / PM, Chief Traction Power Controller பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியான மத்திய அரசு நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பில், Dy. CPM / PM, Chief Traction Power Controller ஆகிய பணிகளுக்கு என்று கீழுள்ளவாறு மொத்தமாக 11 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் ஏதேனும் ஒரு டிகிரி அல்லது Diploma (3 ஆண்டுகள்) முடித்திருக்க வேண்டும்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் மத்திய அல்லது மாநில அரசு நிறுவனங்களில் வழக்கமான முறையில் ஒத்த பதவிகளில் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ற பதவிகளில் பணிபுரிபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனுபவம் குறித்த முழு விவரங்களை அறிவிப்பில் காணலாம்.
- DY. CPM / PM பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கட்டாயம் 55 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வான பின் பணியின் போது தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப பணிக்கு தகுந்தாற்போல் Parent pay plus deputation duty allowance வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation basis அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்த உள்ளதால், இப்பணிகளுக்கு தேர்வுகள் மற்றும் நேர்காணல் இல்லாமல், நேரடியாக கலந்தாய்வின் வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.