சபரிமலையில் செப்.17 முதல் பக்தர்களுக்கு அனுமதி – தேவசம் போர்டு அறிவிப்பு!
கேரளாவில் உள்ள சபரிமலையில் மலையாள மாத கன்னி பூஜைக்காக செப்டம்பர் 16ம் தேதி முதல் சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. இதனையடுத்து செப்.17 முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சபரிமலை நடைதிறப்பு:
கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக சபரிமலை கோவிலில் பக்தர்கள் வருகை மறுக்கப்பட்டது. சுவாமிக்கு நடைபெறும் தினசரி பூஜைகள் மற்றும் சடங்குகள் போன்றவை கோயில் வளாகத்தில் உள்ள ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்ததை அடுத்து மாதாந்திர பூஜைகளுக்காக முன்பதிவில் அடிப்படையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பரவும் அச்சம் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அமல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தற்போது மலையாள மாத கன்னி பூஜை நடைபெறவுள்ளது. இதற்காக செப்டம்பர் 16ம் தேதி முதல் கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதற்கான பக்தர்கள் முன்பதிவு இணையதளம் வாயிலாக செப்டம்பர் 8ம் தேதி முதல் துவங்கியுள்ளது. தினமும் 15,000 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மலையாள மாத கன்னி பூஜை செப்டம்பர் 16 முதல் 21ம் தேதி வரை நடைபெறும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இன்னும் 8 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது – செப்டம்பர் மாதத்தில் மீதமுள்ள விடுமுறை நாட்கள்!
கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சபரிமலை வரும் பக்தர்களுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று மற்றும் 48 மணி நேரத்திற்கு முன் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.