தேவர் ஜெயந்தி விழா: மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம் – அதிரடி உத்தரவு!!
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாளை மதுரையில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்
இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களில் ஒருவரான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவானது நாளை கொண்டாடப்பட உள்ளது. மேலும் இவ்விழாவை பொதுமக்கள் பாதுகாப்பாக கொண்டாட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ராமநாதபுர மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு நினைவிடம் இருப்பதால் ஏராளமானோர் வருகை புரிவார்கள். அதனால் இங்குள்ள மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஐடி ஊழியர்களிடம் அதிகரிக்கும் மூன்லைட்டிங் பிரச்சனை – பாதிப்புகள் குறித்த தகவல் !
இவ்விழாவை முன்னிட்டு கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு நாளை தமிழக முதல்வர் வருகை புரிய இருக்கிறார். அதனால் சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார். அதன்பின்பு மதுரையில் இன்று இரவு தங்கி நாளை காலை மதுரை கோரிப்பாளையம் பகுதிக்கு செல்கிறார். இதையடுத்து இப்பகுதியில் இருக்கும் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.
Exams Daily Mobile App Download
Follow our Instagram for more Latest Updates
அதனால் இப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இங்கு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு இப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை காலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை கோரிபாளையம் தேவர் சிலை நோக்கி லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல தடை என போக்குவரத்து போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இவ்விழாவில் கலந்து கொள்ளும் வாகனங்களை தவிர்த்து மற்ற வாகனங்கள் சுற்றுச்சாலை வழியாக செல்ல வேண்டும் எனவும் அறிவித்துள்ளார்.