ஐடி ஊழியர்களிடம் அதிகரிக்கும் மூன்லைட்டிங் பிரச்சனை – பாதிப்புகள் குறித்த தகவல் !
இந்தியாவில் ஐடி துறையினரிடம் மூன்லைட்டிங் பிரச்சனை அதிகரித்துள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் மூன்லைட்டிங்கை காரணம் காட்டி ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர்.
மூன்லைட்டிங்:
ஐடி துறையில் உள்ள 50% மேற்பட்ட ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டு பகுதி நேரமாக பிற நிறுவனங்களில் பணி (MOON LIGHTING) புரிவது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக வீட்டில் இருந்து வேலையும் செய்யும் ஊழியர்கள் அதிக அளவு மூன் லைட்டிங் பிரச்சனையில் சிக்கியுள்ளனர். அதனால் பல நிறுவனங்கள் மூன்லைட்டிங்கில் ஈடுபட்டுள்ள தங்களது பணியாளர்களை வேலை நீக்கம் செய்து வருகிறது.
குஜராத்தில் பொது சிவில் சட்டம் அமல்? அமைச்சரவை ஒப்புதல்!! அமைச்சர் தகவல்!!
மேலும் இந்த பிரச்சனையால் WFH ஊழியர்களில் 90% பேர் இன்னும் ஆறு மாதங்களுக்குள் மீண்டும் அலுவலகத்திற்கு திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மூன்லைட்டிங் குறித்து பேசிய கலி பெஹரின் தலைவர், மூன்லைன்ட்டிங்கில் ஊழியர்களின் கவனம் சிதறுவதாக கூறுகிறார். அத்துடன் இரண்டு நிறுவன வேலைகளையும் செய்வதால் அவர்கள் மன மற்றும் உடல்நல பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்கிறார்.
Exams Daily Mobile App Download
Follow our Instagram for more Latest Updates
அதே நேரம் இவர்கள் முழு நேரம் பணிபுரியும் நிறுவனம் சில காரணங்களால் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடுகிறது. மேலும் ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு வேறு நிறுவனத்தில் பணிபுரிவது நிறுவன கொள்கைக்கு எதிரானது என்று லாம் பாம்பே அறக்கட்டளை மனித வள நிர்வாகி தெரிவித்துள்ளார்.