தமிழகத்தில் வருகிற அக். 11 பவர் கட் செய்யப்படும் பகுதிகளின் விவரம் – பொதுமக்களே உஷார்!
தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்கு உட்பட்ட முத்துராமலிங்கபுரம் துணைமின்நிலையத்தில் வருகிற அக்.11 ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்தடை ஏற்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மின்தடை பகுதிகள்:
தமிழகத்தில் இயங்கி வரும் அரசு துறைகளில் முக்கியமான துறையாக மின்சாரத் துறை இருக்கிறது. உணவு, உடை, இருப்பிடம் என அத்தியாவசிய தேவைகளின் வரிசையில் மின்சாரமும் ஒன்றாக மாறிவிட்டது. தடையில்லா மின்சாரம் தமிழகம் முழுவதும் வழங்க வேண்டும் என்பதால், அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மாவட்டம் வாரியாக உள்ள துணை மின்நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
அதன் காரணமாக அந்த பகுதியில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் மின்தடை ஏற்படும். முன்னதாகவே மின்சாரவாரியம் சார்பில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அந்த வகையில் வருகிற அக். 11 ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்கு உட்பட்ட முத்துராமலிங்கபுரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி வாடிக்கையாளர் கவனத்திற்கு – இனி இந்த திட்டம் கிடையாது!
Exams Daily Mobile App Download
அதன் படி, முத்துராமலிங்கபுரம், நரிக்குடி, பரளச்சி மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் மாதாந்திர பணிகள் நடைபெற இருப்பதால், வருகிற அக். 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மின்சார தேவை இருப்பின் மாற்று ஏற்பாடு செய்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்