தமிழக பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் விபரங்கள் – அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கையை கொண்டுள்ள பள்ளிகளுக்கு கூடுதல் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர்கள் எனவும் அப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி தெரிவித்துள்ளார்.
கூடுதல் ஆசிரியர்கள்
கொரோனா பேரிடர் காலத்தின் மத்தியிலும் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழக பள்ளிகளில் தற்போது 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை பணிகளும் மற்றும் புத்தகங்கள் விநியோகமும் நடைபெற்று வருகிறது. இதனுடன் தமிழக அரசு பள்ளிகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கையை பதிவு செய்யும் பள்ளிகளுக்கு கூடுதல் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர்கள் எனவும் அப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் – கல்வித்துறை அறிவுறுத்தல்!
முன்னதாக அரசு பள்ளி மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து, இது பற்றி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறுகையில், ‘அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்ப்பதில் பெருமளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த செயல்கள் மகிழ்ச்சியை தருகிறது. ஏனென்றால் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி தான் பல்வேறு நலத்திட்டங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக காணப்படும் பட்சத்தில் பள்ளிகளுக்கு தேவையான கூடுதல் ஆசிரியர்கள், பள்ளி வகுப்பறைகள் கட்டமைப்பு உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் பள்ளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும்’ என தெரிவித்துள்ளார்.