தமிழக பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் – கல்வித்துறை அறிவுறுத்தல்!
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மாணவர் சேர்க்கையின் போது விண்ணப்பப் படிவங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை கட்டணம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அளித்து வருகிறது. மேலும் தமிழகத்தில் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளது. அதனால் ஜூன் 14 முதல் தலைமை ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இதன் படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து வருகின்றன. கொரோனா குறைந்துள்ள 27 மாவட்டங்களில் புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜூலை 1 முதல் அமல் – புதிய நடைமுறைகள்!
அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் 9ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து சேர்க்கை நடைபெற்று வருகிறது. 10 வகுப்பு மதிப்பெண்கள் சான்றிதழில் மதிப்பெண்கள் இல்லாமல் தேர்ச்சி என்று மட்டுமே குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கபடுகிறது. மேலும் தற்போதைய பெருந்தொற்று சூழலில் பள்ளிகள் திறப்பது குறித்து கலந்தாலோசிக்கவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடிய நிலையில் உள்ளனர். இதனை கருத்திற்கொண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது விண்ணப்ப படிவங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் எனவும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.