தமிழகத்தில் மழையால் சேதமான நெற்பயிர்களுக்கு ரூ. 20000 நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் சேதமான பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பயிர்களுக்கு நிவாரணம்:
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தலைமைச் செயலகத்தில் இன்று (பிப். 6) அமைச்சர்கள் சந்தித்து விளக்கி அறிக்கை சமர்ப்பித்தனர். அதன் பின் அமைச்சர்களின் கருத்துக்கள் மற்றும் அறிக்கையின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு முதல்வர் நிவாரணம் குறித்து அறிவிப்பு வெளியிட்டார்.
மாதம் ரூ.300 வாடகையில் தங்குமிடம்.. சட்டசபை தேர்தலை முன்னிட்டு ராஜஸ்தான் அரசின் அதிரடி சலுகை!!
Follow our Instagram for more Latest Updates
அதில் டெல்டா மாவட்டங்களில் மழையால் சேதமான பயிர்களுக்கு நிவாரணமாக, ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் கனமழையால் பாதிக்கப்பட்ட உளுந்து விவசாயிகளுக்கு 50% மானியத்தில் 8 கிலோ பயறுவிதைகள் தரப்படும். 33% மற்றும் அதற்குமேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் சேதமடைந்த இளம் பயறு வகைகளுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என அவர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.