இன்று முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு – மாநில அரசின் வழிகாட்டுதல்கள்!

0
இன்று முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு - மாநில அரசின் வழிகாட்டுதல்கள்!
இன்று முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு - மாநில அரசின் வழிகாட்டுதல்கள்!
இன்று முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு – மாநில அரசின் வழிகாட்டுதல்கள்!

டெல்லியில் உள்ள அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மாநில கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா தொற்று பரவலை பரவலை கட்டுப்படுத்த கடந்த 2020ம் ஆண்டு நாடு முழுவதும் விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு முன்னதாகவே டெல்லியில் டெல்லியில் உள்ள பள்ளிகள் மார்ச் மாதத்தில் மூடப்பட்டது. அதன் பிறகு, 2021ம் ஆண்டு தொடக்கத்தில் 9 – 12 வகுப்புகளுக்கு மட்டுமே உடல் வகுப்புகளை தொடங்கியது. மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்த காரணத்தால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது. அதன் பிறகு கொரோனா இரண்டாம் அலையின் துவக்கத்தின் காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருந்தது. டெல்லியில் கோவிட் நிலைமை சீரடைந்து வந்த காரணத்தால் 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் செப்டம்பர் 1 முதல் மீண்டும் திறக்கப்பட்டது.

விடிய விடிய கடைகளை திறக்க அனுமதி, தீபாவளிக்கு கூடுதல் தளர்வுகள் – அரசு அறிவிப்பு!

டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) கடந்த வாரம் நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி, கொரோனா தொற்றுநோய் காரணமாக 19 மாதங்கள் மூடப்பட்டிருந்த டெல்லியில் உள்ள பல பள்ளிகள் நவம்பர் 1 ஆம் தேதி அனைத்து வகுப்புகளுக்கும் மீண்டும் திறக்கப்பட்டது. ஒரு சில கல்வி நிலையங்கள் மட்டும் தீபாவளி பண்டிகைக்கு பின்னர், ஒரு வாரம் கழித்து பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதால், டெல்லி கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா, மேற்கு வினோத் நகரில் உள்ள ராஜ்கியா சர்வோதயா பால் / கன்யா வித்யாலயா பள்ளியில் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பிறகு, நர்சரி முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் அனைத்து கோவிட்-19 நெறிமுறைகளையும் பின்பற்றி வருகிறோம் என்று டெல்லி கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார். வகுப்பறையில் ஒரு நேரத்தில் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த மாணவரும் நேரடி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை என்பதையும் பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் டிடிஎம்ஏ அறிவுறுத்தியுள்ளது.

இம்மாதம் வங்கிகளுக்கு 17 நாட்கள் விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

கோவிட்-19 கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். ரேஷன் விநியோகம் மற்றும் தடுப்பூசி போன்ற நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் பகுதியை கல்வி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் பகுதியிலிருந்து பிரிக்க வேண்டும் என்றும் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் கல்வி நிலையங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!