நாளை இந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை – முதல்வர் அறிவிப்பு!!
தேசிய தலைநகர் டெல்லியில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக நாளை (ஜூலை 10) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
பள்ளி விடுமுறை
கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள், கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் கனமழையால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். அதே போல, வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
UPSC ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023- டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்!
அந்த வகையில் தேசிய தலைநகர் டெல்லியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து கொண்டிருக்கிறது. அதன்படி கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு டெல்லியில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (ஜூலை 10) விடுமுறை அளிக்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதற்கிடையில், டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 153 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.