டெல்லியில் ஒரே நாளில் 1,568 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!!
டெல்லியில் கடந்த ஒரு நாளில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்புகள் குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 1,568 பேருக்கு புதிதாக தொற்று பாதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. டெல்லியில் நேற்று ஒரு நாளில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்புகளை குறித்து சுகாதார அமைச்சகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது, அதன்படி, நேற்று ஒரு நாளில் மட்டும் 1,568 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் சிகிச்சையில் 21,739 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் மே 31க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு? மருத்துவர்கள் எதிர்பார்ப்பு!
நேற்று ஒரு நாளில் 156 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை 23,565 உயிர் பலி டெல்லியில் பதிவாகியுள்ளது. இதுவரை 13,74,682 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 73,406 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
டெல்லியின் நேர்மறை விகிதம் தற்போது 2.14% ஆக உள்ளது. வீட்டுத் தனிமையில் 11,915 பேர் உள்ளனர். டெல்லி முழுவதும் நேற்றைய நிலவரப்படி, உள்ள கட்டுப்பாட்டு மையங்கள் 39640 ஆக உள்ளது. டெல்லியில் தொடர் ஊரடங்கிற்கு பின்னர் கொரோனா பாதிப்பு விகிதம் படிப்படியாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.