தமிழகத்தில் பால் முகவர்களுக்கு காப்பீடு வழங்க முடிவு – ஆவின் புதிய திட்டம்!

0
தமிழகத்தில் பால் முகவர்களுக்கு காப்பீடு வழங்க முடிவு - ஆவின் புதிய திட்டம்!
தமிழகத்தில் பால் முகவர்களுக்கு காப்பீடு வழங்க முடிவு - ஆவின் புதிய திட்டம்!
தமிழகத்தில் பால் முகவர்களுக்கு காப்பீடு வழங்க முடிவு – ஆவின் புதிய திட்டம்!

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் சார்பில் பால் முகவர்களுக்கு புது பசுக்கள் வாங்குவதற்கு காப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காப்பீடு

தமிழகத்தில் கறவை மாடுகள் மற்றும் பால் முகவர்களுக்கு ஆவின் நிறுவனத்தின் மூலமாக காப்பீடு வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, கறவை மாடுகள் இறந்து போனால் பால் முகவர்கள் புதிய மாடு வாங்குவதற்கு காப்பீடு வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மத்திய அரசு ஆடு, மாடு கோழிகளுக்கு காப்பீடு வழங்கி வரும் நிலையில் தற்போது ஆவின் நிறுவனமும் காப்பீடு வழங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, பால் முகவர்களிடம் காப்பீடு கட்டணமாக ரூ. 600 முதல் ரூ. 700 வரை வசூல் செய்யப்படும் எனவும், 25%வரையிலும் காப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வேலை உங்கள் கனவா? நீங்கள் செய்ய வேண்டியது இது தான்.. இப்பவே முந்துங்கள்!

மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு 50%வரையிலும் காப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல, தமிழக பால் முகவர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்து காப்பீடும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆவின் நிறுவனத்தின் சார்பில் பால் முகவர்களை அழைத்து ஆலோசனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!