தமிழக அரசு அதிரடி – சிறிய கோயில்களை இணைக்க முடிவு!
தமிழகத்தில் வருமானம் இல்லாத சிறிய கோயில்களை பெரிய கோயில்களுடன் இணைப்பது தொடர்பாக விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோயில் அலுவலர்களுக்கு அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
கோயில்கள் இணைப்பு:
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு தமிழக அறநிலையத்துறையில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் இனி தமிழில் தான் அர்ச்சனை செய்யப்படும் என்று அரசு கடந்த மாதம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. மேலும், இதற்கான பயிற்சி மையங்களும் தமிழகத்தில் தொடங்கப்பட்டு அதற்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டு விட்டது.
ஜூலை 19 முதல் கட்டுப்பாடுகள் நீக்கம் – லண்டன் அரசு அறிவிப்பு !!
தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள ஓதுவார், அர்ச்சகர், பூசாரி போன்ற காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் இனி தமிழில் தான் அர்ச்சனை செய்யப்படும். தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற அறிவிப்பு பலகை கோவில்களில் வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
தற்போது, அதிக வருமானம் இல்லாத சிறிய கோயில்களை பெரிய கோயில்களுடன் இணைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இதுதொடர்பாக அனைத்து கோயில் அலுவலர்களும் விரிவான அறிக்கையை அனுப்ப வேண்டும் என்று அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். வருவாய் இல்லாத கோயில்களில் அர்ச்சகர், தூய்மை பணியாளர்களை அமைச்சர் சேகர்பாபு உத்தரவின்படி, நியமனம் செய்ய ஆணையர் குமரகுருபரன் முடிவு செய்துள்ளார். அதிக வருமானம் உள்ள பெரிய கோயில்களுடன் சிறிய கோயில்களை இணைப்பதன் மூலம் சிறிய கோயில்களுக்கு தேவையான நிதி கிடைக்கும் என்று அரசு கருதுகிறது.